News February 17, 2025

உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- இருவர் கைது

image

புதுச்சேரி திருபுவனையைச் சோர்ந்தவர் செந்தில்குமார். மேம்பாலத்தில் உள்ள அவரது உணவகம் மீது பைக்கில் வந்த இருவர் நாட்டு வெடிகுண்டை வீசினர் என்ற புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், திருவெண்டார்கோவில் பகுதியைச் சோர்ந்த சபரிவாசன் அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சோர்ந்த பிரபாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News November 25, 2025

புதுச்சேரியில் இன்று மின்தடை அறிவிப்பு

image

புதுவை கிழக்கு கடற்கரை சாலை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று(நவ.25) நடைபெற உள்ளது. இதனால் காலை 10 மணி முதல் மதியம் 3 வரை பீமன் நகர் ஒரு பகுதி அமிர்தா நகர், திலாசுப்பேட்டை, ஞான தியாகு நகர், ராகவேந்திரா நகர், பிவிபி நகர் ஒரு பகுதி, தட்டாஞ்சாவடி ஒரு பகுதி, கவுண்டன் பாளையம் ஒரு பகுதி, இசிஆர் பழனிராஜா உடையார் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

News November 25, 2025

புதுவை: வெளிநாட்டு மாணவரை தேடி பிடித்த போலீசார்

image

ருவாண்ட நாட்டை சேர்ந்த சேமா மன்சி பபரீஷ்(35) என்பவர் சிதம்பரம் அண்ணாமலை ப.கழகத்தில் பட்டம் படித்த பின், புதுவை ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார். இவரது விசா காலம் கடந்த அக்டோபரில் முடிவடைந்த நிலையில், விசா புதுப்பிக்கப்படவில்லை. புதுவையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலர்கள் இவரை தேடிய நிலையில், முதலியார்பேட்டை தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரிந்து அவரை நேற்று போலீசார் பிடித்தனர்.

News November 25, 2025

புதுச்சேரி: மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்லாதீர்

image

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் இன்று (நவ.24) வெளியிட்டுள்ள செய்தியில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி நாளை 25-ந்தேதி முதல் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று
தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றார்

error: Content is protected !!