News February 17, 2025

உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- இருவர் கைது

image

புதுச்சேரி திருபுவனையைச் சோர்ந்தவர் செந்தில்குமார். மேம்பாலத்தில் உள்ள அவரது உணவகம் மீது பைக்கில் வந்த இருவர் நாட்டு வெடிகுண்டை வீசினர் என்ற புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், திருவெண்டார்கோவில் பகுதியைச் சோர்ந்த சபரிவாசன் அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சோர்ந்த பிரபாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News November 27, 2025

காரைக்காலில் புயல் எச்சரிக்கைக் கூண்டு

image

வங்கக்கடலில் ‘டிட்வா புயல்’ உருவானதை அடுத்து காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில், 4ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காரைக்கால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக துறைமுகத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

News November 27, 2025

புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..

News November 27, 2025

மத்திய நிதி அமைச்சரை சந்தித்த புதுவை சபாநாயகர்

image

புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்தார். பின் புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு, விரைந்து அனுமதி அளித்து மத்திய அரசின் மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்குவதற்கு, இந்த நிதி ஆண்டில் முதற்கட்ட நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் அளித்தார்.

error: Content is protected !!