News February 17, 2025

உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- இருவர் கைது

image

புதுச்சேரி திருபுவனையைச் சோர்ந்தவர் செந்தில்குமார். மேம்பாலத்தில் உள்ள அவரது உணவகம் மீது பைக்கில் வந்த இருவர் நாட்டு வெடிகுண்டை வீசினர் என்ற புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், திருவெண்டார்கோவில் பகுதியைச் சோர்ந்த சபரிவாசன் அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சோர்ந்த பிரபாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News November 24, 2025

புதுச்சேரி: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 24, 2025

புதுச்சேரி முதல்மைச்சர் ரங்கசாமி வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,, பார்வையற்றோருக்கான மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது. இன்னும் பல புகழ்பெற்ற தருணங்கள் வரவும், தொடர்ந்து வரலாற்றைப் படைத்துக்கொண்டே இருக்கவும், இந்திய அணிக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

News November 24, 2025

காரைக்கால்: வாகன ஓட்டிகளுக்கு ரூ.10,000 அபராதம்

image

காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யா உத்திரவின்பேரில் நேற்று இரவு போக்குவரத்து போலீசார் நகரின், பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி தலைமையில் ‘பிரீத் அனலைசர்’ கருவி மூலம் வாகன ஓட்டிகளை சோதனை செய்தனர். அப்போது 9 பேர் மது போதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்ததால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!