News August 14, 2024
உடையார்பாளையம் : கம்பி வேலியை திருடிய மூவர் கைது

உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் சுங்கச்சாவடிக்கு சொந்தமான 50 கிலோ எடை கொண்ட கம்பி வேலியை அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ், மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோர் திருடி சென்றனர். அப்போது, உடையார்பாளையம் காவல் துணை ஆய்வாளர் ரமேஷ் பாபு ரோந்து சென்றார். அதை கண்ட மூவரும் இரும்பு கம்பியை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பி சென்றனர். பின்னர், போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News December 2, 2025
அரியலூர்: முதன்மை நீதிபதி முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சட்டப்பணிகள் ஆணை குழுவிற்கு, தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதன்படி 50 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், விருப்பமுள்ளவர்கள் http://ariyalur.dcourts.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சட்ட பணிகள் ஆபிசில் நேரடியாக டிசம்பர் 16ஆம் தேதிக்குள் வழங்கலாம் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மலர்வாலன்டினா தெரிவித்துள்ளார்.
News December 2, 2025
அரியலூர்: சந்தைக்கு சென்றவர் பலி

மீன் சுருட்டி வார சந்தைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்ப முயன்ற போது பெயிண்டர் வேலை செய்து வந்த சந்திரசேகர் என்பவர் சாலை விபத்தில் உயிரிழப்பு. மீன்சுருட்டி, காட்டுமன்னார்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வலது புறம் திரும்ப முயன்று உள்ளார். எதிர்பார விதமாக கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 2, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டம், முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (டிச.1) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!


