News May 7, 2025
உடன்குடி அருகே கார் விபத்தில் மாணவர் பலி

திசையன்விளை கரைச்சுத்துபுதூர் சாய்ராம்(18), பிளஸ் டூ மாணவரான இவர் தன் உறவினர் சிலருடன் திருச்செந்தூரில் ஒரு திருமணத்திற்காக நேற்று காரில் வந்துள்ளார். கார் உடன்குடி சமாதானபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் சாய்ராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News December 14, 2025
தூத்துக்குடி வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News December 14, 2025
தூத்துக்குடி: மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியர் கைது

விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் தியாகராஜன் அப்பள்ளியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. எனவே ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து தனிப்படை போலீசார் நேற்று மதுரையில் வைத்து ஆசிரியரை கைது செய்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
News December 14, 2025
தூத்துக்குடி: 46 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்.. டிஐஜி உத்தரவு!

நெல்லை காவல் சரகம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 46 இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் மாற்றம் செய்து நெல்லை காவல் சரக பொறுப்பு டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார். இதில், தூத்துக்குடி மத்திய பாகம், வடபாகம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், முறப்பநாடு, புதூர், ஆழ்வார்திருநகரி, நாலாட்டின் புதூர் ஆகிய பகுதிகளுக்கு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


