News May 7, 2025
உடன்குடி அருகே கார் விபத்தில் மாணவர் பலி

திசையன்விளை கரைச்சுத்துபுதூர் சாய்ராம்(18), பிளஸ் டூ மாணவரான இவர் தன் உறவினர் சிலருடன் திருச்செந்தூரில் ஒரு திருமணத்திற்காக நேற்று காரில் வந்துள்ளார். கார் உடன்குடி சமாதானபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் சாய்ராமுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News December 2, 2025
தூத்துக்குடி விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வேளாண்மை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 25 ஆயிரம் வேப்பமரக்கன்றுகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அந்தந்த பகுதியில் உள்ள வட்டார உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News December 2, 2025
தூத்துக்குடி: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் <
News December 2, 2025
தூத்துக்குடி: தந்தையை கொலை செய்த மகளுக்கு ஆயுள்

நாலாட்டின்புதூர் சித்தர் நகரை சேர்ந்தவர் சுப்பையா. கடந்த 2019-ம் ஆண்டு இவரை சொத்து பிரச்சனை காரணமாக இவரது மகள் மூக்கம்மாள் தந்தை சுப்பையாவை பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மூக்கமாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


