News August 26, 2024
ஈரோட்டை சேர்ந்த அமைப்பிற்கு விருது வழங்கிய எம்பி

ஈரோடு ஜேசிஐ கிரீன் சிட்டி என்ற அமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த வேளாண்மை துறைக்கான விருதை இன்று பெற்றது. இதனை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, விருதினை பெற்றவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
Similar News
News November 21, 2025
ஈரோடு: தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

ஈரோடு மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 21, 2025
ஈரோட்டில் அதிகபட்ச வெயில் பதிவு

தமிழ்நாட்டில் நேற்று (20-11-25) அதிக அளவாக, ஈரோட்டில் 95.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 35.2 டிகிரி செல்சியஸ் வெயில் (95.36 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.
News November 21, 2025
ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை – 7 ஆண்டு சிறை!

ஈரோடு, சித்தோடு கொங்கம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (69). 8.7.2024 அன்று கோவிலுக்கு வந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கம்பக்கத்தினர் கண்டு சிறுமியை மீட்டு பவானி மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் அவரை கைது செய்தனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணகுமார் சுப்பிரமணிக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்ததுடன், சிறுமிக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்க பரிந்துரைத்தார்.


