News March 20, 2024
ஈரோட்டு: டிராக்டரை சேதப்படுத்திய காட்டு யானை

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட காமைன்புரம் கிராமத்தில், விவசாயி துரைசாமி என்பவரின் தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை சேதப்படுத்தி உள்ளது. இதில் டிராக்டர் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து ஜீர்கள்ளி வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
Similar News
News April 21, 2025
ஈரோடு: மயங்கி விழுந்த கட்டிட தொழிலாளி பலி!

ஈரோடு, அத்தாணி அருள்வாடிபுதூரைச் சேர்ந்தவர் முருகன் (55) கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து, உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 20, 2025
தாளவாடி: லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட்

தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்வாரிய ஊழியர் மணிகண்டன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் வயர்மேன் மணிகண்டன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தாளவாடி மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
News April 20, 2025
ஈரோடு: ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஈரோடு, நலவாரியங்களில் பதிவு பெற்ற 60வயது நிறைவடைந்த 11,000 மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்காக ஆண்டு ஆயுள் சான்றை இந்த <