News January 23, 2025

ஈரோட்டில் ₹ 1.50 கோடி பறிமுதல்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது அதை ஒட்டி ஐந்து பறக்கும் படையில் அமைக்கப்பட்டு தேர்தல் பட்டுவாடாவுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர். பணம் ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்று தனியார் ஏடிஎம் நிறுவனத்தார் உரிய ஆவணம் இல்லாமல் ₹ 1.50 கோடி எடுத்துச் சென்றதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

Similar News

News November 17, 2025

ஈரோட்டில் வசமாக சிக்கிய நபர் அதிரடி கைது!

image

வெள்ளிதிருப்பூர் நாகிரெட்டிபாளையத்தில் கேரளா லாட்டரி விற்பதாக மாவட்ட எஸ்.பி தனிப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த சண்முகம் (55) என்பவர் பிடித்து விசாரித்ததில் அவரிடமிருந்து கேரளா லாட்டரிகள் 24 பணம் 4,800 ஆண்ட்ராய்டு செல்போன் 1 ஆகியவையுடன் சண்முகத்தை வெள்ளித்திருப்பூர் காவல்துறையினர் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

News November 17, 2025

பவானி அருகே வேன் கவிழ்ந்து விபத்து!

image

பவானி அருகே மூன்றுரோடு பகுதியில் பவானியில் இருந்து மேட்டூர் நோக்கி ஈரோடு–மேட்டூர் பிரதான சாலையில் சென்ற மினி டெம்போ வேன் , திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் எதிர்திசையில் உள்ள புளியமரத்தை மோதி, பின்னர் ஒருபுறமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் டெம்போ ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 17, 2025

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்-100 க்கும், சைபர் கிரைம் எண்-1930 க்கும், குழந்தைகள் உதவி எண்-1098 எண்களும், போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

error: Content is protected !!