News March 24, 2025
ஈரோட்டில் வரி செலுத்திய மக்கள்

ஈரோடு மாநகராட்சியில் 2024-2025ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரிகளை வருகின்ற மார்ச்.31 வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இதில், வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று வரிகளை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இன்று (24) காலை சம்பத் நகர் மாநகராட்சி கிளை அலுவலகத்தில் பொதுமக்கள் வரிசையில் நின்று வரிகளை செலுத்தி சென்றனர்.
Similar News
News November 9, 2025
நம்பியூர் அருகே சோகம்

நம்பியூா் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தாமணி. இவர் கவுன்சிலராக உள்ளாா். இவரது கணவா் குமாரசாமி. இவர் கடந்த 6-ம் தேதி எலத்தூரில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 9, 2025
சத்தியமங்கலம் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

சத்தி நகராட்சியில் புதிதாக கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில், பலா் அதற்கு சொத்துவரி விதிப்பு செய்யப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். மேலும் வீட்டில் மேல்பகுதியில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கும் சொத்துவரி செய்யப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளதால், அதனை விரைவில் செலுத்த சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் வெங்கடேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News November 9, 2025
பனை விதை நடும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்

பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மூலம் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு வேளாண்மை வளாகத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் 2000 பனை விதைகள் இன்று நடப்பட்டது அந்தியூர் பவானி கீழ்வாணி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.


