News January 22, 2025
ஈரோட்டில் ரயில் மோதி தொழிலாளி பலி!

ஈரோடு,கொல்லம்பாளையம் காட்டு தெருவில் வசித்த தொழிலாளி மூர்த்தி 56. பொங்கல் பண்டிகைக்காக சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் இருந்தது. எட்டு ஆண்டுகளாக காது கேட்காது. நேற்று மதியம் ஊஞ்சலுார்-பாசூர் ரயில்பாதையை கடக்க முற்பட்டார். அப்போது ஈரோடு-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் மோதியதில், தலை துண்டாகி பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 28, 2025
BREAKING ஈரோடு: “2026-இல் விஜய் முதல்வராவது உறுதி!”

கோபிச்செட்டிபாளையத்திற்கு இன்று மாலை வந்த செங்கோட்டையனுக்கு, அவரது ஆதவாளர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது உரையாற்றிய அவர், விஜய் 2026ல் முதலமைச்சர் ஆவதை, எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. விஜய்க்கு என்றும் நான் வழிகாட்டியாக இருப்பேன். டிசம்பருக்கு பிறகு கட்சி வலுப்பெறும் என்றார். மேலும் தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள் ஆள வேண்டுமா (அ) புதிய தலைமறை ஆள வேண்டுமா எனவும் கேள்வியெழுப்பினார்.
News November 28, 2025
கன்றுக்குட்டியை அடித்துக் கொன்ற சிறுத்தை!

பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை பசுவபாளையம் கிராமத்திற்குள் புகுந்து விவசாயி ராஜம்மாள் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தாக்கி கடித்ததில், கன்று குட்டி உயிரிழந்தது. வனத்துறையினர் ஆய்வு செய்து, சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
சிறுத்தை தாக்கி பலியான கன்று குட்டிக்கு இழப்பீடு வழங்கப்படும் கேமரா பொருத்தப்படும் என உறுதி அளித்தனர்.
News November 28, 2025
BREAKING ஈரோடு: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

தவெகவில் இணைந்த செங்கோட்டையைன், ஈரோடு செல்வதற்காக இன்று சென்னையில் இருந்து, விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தவெகவிற்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. வரும் 2026ம் ஆண்டில் விஜய் முதலமைச்சராக வருவார். அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன். விஜய் உடன் தான் மக்கள் சக்தி உள்ளது. என் உயிர் மூச்சு உள்ளவரை தவெகவிற்கு பணியாற்றுவேன்” என தெரிவித்தார்.


