News January 22, 2025
ஈரோட்டில் ரயில் மோதி தொழிலாளி பலி!

ஈரோடு,கொல்லம்பாளையம் காட்டு தெருவில் வசித்த தொழிலாளி மூர்த்தி 56. பொங்கல் பண்டிகைக்காக சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் இருந்தது. எட்டு ஆண்டுகளாக காது கேட்காது. நேற்று மதியம் ஊஞ்சலுார்-பாசூர் ரயில்பாதையை கடக்க முற்பட்டார். அப்போது ஈரோடு-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் மோதியதில், தலை துண்டாகி பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 17, 2025
ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
ஈரோட்டில் வசமாக சிக்கிய நபர் அதிரடி கைது!

வெள்ளிதிருப்பூர் நாகிரெட்டிபாளையத்தில் கேரளா லாட்டரி விற்பதாக மாவட்ட எஸ்.பி தனிப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த சண்முகம் (55) என்பவர் பிடித்து விசாரித்ததில் அவரிடமிருந்து கேரளா லாட்டரிகள் 24 பணம் 4,800 ஆண்ட்ராய்டு செல்போன் 1 ஆகியவையுடன் சண்முகத்தை வெள்ளித்திருப்பூர் காவல்துறையினர் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
News November 17, 2025
பவானி அருகே வேன் கவிழ்ந்து விபத்து!

பவானி அருகே மூன்றுரோடு பகுதியில் பவானியில் இருந்து மேட்டூர் நோக்கி ஈரோடு–மேட்டூர் பிரதான சாலையில் சென்ற மினி டெம்போ வேன் , திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் எதிர்திசையில் உள்ள புளியமரத்தை மோதி, பின்னர் ஒருபுறமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் டெம்போ ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


