News April 9, 2025
ஈரோட்டில் மதுக்கடைகளை மூட உத்தரவு

ஈரோடு மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில், மகாவீரா் ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், பார்கள், மனமகிழ் மன்ற மதுகூடங்கள், நட்சத்திர ஹோட்டல் மதுக்கூடங்கள், சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுவகைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 22, 2025
ஈரோடு: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<
News November 22, 2025
மொடக்குறிச்சி அருகே சிமெண்ட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து

ஈரோடு முத்தூர் மெயின் ரோட்டில் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதமாக விதமாக அந்த வழியே வந்த சிமெண்ட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் தப்பினர் இது குறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News November 22, 2025
அந்தியூரில் பெண்ணிடம் பணம் பறித்த இருவர் கைது!

அந்தியூர் கொல்லம்பாளையம் சுரேஷ் என்பவர் மனைவியிடம் திருவண்ணாமலையை சேர்ந்த பிரியங்கா,செல்வத்துரை ஆகிய இருவர், குழந்தை பிறக்கும் மாத்திரை என கொடுத்துள்ளனர். மாத்திரை சாப்பிட்ட சுரேஷின் மனைவி மயக்கம் அடைந்த நிலையில் இருவரும் அவரிடம் இருந்த ரூ.25000 பணத்தை எடுத்து தப்பி விட்டனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியங்கா,செல்வத்துரை ஆகிய இருவர் கைது செய்தனர்.


