News March 28, 2025
ஈரோட்டில் சகல தோஷங்களையும் நீக்கும் கோயில்!

ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தில் முத்து வேலாயுதசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பழைய ஏட்டுச் சுவடி ஒன்றில் பாடலில் இங்கு வந்து முருகப் பெருமானை வணங்கினால் கொடிய நோய்களும் குணமாகி விடும் என்று சொல்லப்படுகிறது. மேலும், தன்னை நாடி வரும் பக்தர்களின் நாக தோஷம் புத்திர தோஷம் உட்பட சகல தோஷங்களையும், பிரச்சினைகளை உடனுக்குடன் தனது பார்வையாலேயே தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Similar News
News October 31, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News October 31, 2025
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!

ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு, கட்சி அலுவகத்தில் விரிவாக பேசவிருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.01) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, காசிபாளையம், சூரம்பட்டிவலசு, தத்துக்காடு, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் 2,3, மலைக்கோவில், சாஸ்திரி நகர், காந்திஜி சாலை, அணைக்கட்டு ரோடு, சங்கு நகர், ராதாகிருஷ்ணன் சாலை, பாரதிபுரம், கோவலன் வீதி, நேதாஜி வீதி, மோகன் குமாரமங்கலம் வீதி, காமராஜ் சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


