News August 11, 2024
ஈரோட்டில் கோடிகளில் பேசப்படும் குதிரை பேரம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடி பெரும் தேர்த்திருவிழாவில் உலக புகழ் பெற்ற கால்நடை கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் ரூ.1 கோடிக்கு வெள்ளை காலா குதிரை விலை பேசப்பட்டது. மேலும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள பல்வேறு அம்சங்களுடன் கூடிய கருப்பு மார்வார் குதிரை ரூ.1.40 கோடி வரை விலை கூறப்பட்ட நிலையில், அதன் உரிமையாளர் குதிரையினை விற்பனை செய்ய முன்வரவில்லை.
Similar News
News December 18, 2025
BREAKING ஈரோட்டிற்கு கடும் நெருக்கடி: CM ஸ்டாலின்

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைவில் களைந்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வரி விதிப்பால் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் தீர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
News December 18, 2025
கோபி தவெக வேட்பாளர் விஜய் அறிவிப்பாரா?

ஈரோடு: பெருந்துறை, விஜயமங்கலம் டோல்கேட் அருகில் தவெக தலைவர் விஜய் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிக்குள் உரையாற்றவுள்ளார். இந்நிலையில் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் செங்கோட்டையன் போட்டியிடுவார் என பேசப்பட்ட நிலையில், இன்று அக்கட்சியின் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாரா? என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க
News December 18, 2025
ஈரோட்டில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். அதன்படி 19-12-2025 காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.


