News August 3, 2024

ஈரோட்டில் காய்கறி விதைகள் விற்பனைக்கு

image

ஈரோடு வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தில், நடப்பு ஆடிப்பட்டத்துக்கு பயிரிட ஏற்ற காய்கறிகள் மற்றும் கீரை வகைகளின் விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் கத்திரி, வெண்டை, பாகற்காய், புடலை, மிளகாய், முருங்கை மற்றும் செங்கீரை, அரைக்கீரை, பாலக்கீரை விதைகளை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என ஈரோடு வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வினோதினி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

பெருந்துறை அருகே பெண் கொடூரக் கொலை!

image

பெருந்துறை அருகே தீர்த்தாம் பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் (60) இவர் மனைவி விஜயா(52) இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். சொத்து விற்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று காஞ்சி கோவில் ரோடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த விஜயாவை செங்கோட்டையன் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டார். காயமடைந்த விஜயா துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.

News December 8, 2025

சித்தோடு அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். தகவல் அறிந்து சென்ற சித்தோடு போலீசார் 2 வாலிபர்களையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில், கருங்கல்பாளையத்தை சேர்ந்த காஜாமொய்தீன் (33) மற்றும் ஹரிபிரசாத் (28) என்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News December 8, 2025

ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.

error: Content is protected !!