News October 23, 2024
ஈரோட்டில் கனமழை: சூழ்ந்த வெள்ளம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு, பகல் நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகளில் நிரம்பி உபரிநீர் ஓடைகளில் வெளியேறி வருகிறது. நேற்று காலை திடீரென கனமழை பெய்தது. லேசாக தொடங்கிய மழை, படிப்படியாக அதிகரித்து கொட்டித் தீர்த்தது. ஈரோடு வஉசி பெரிய காய்கறி மார்க்கெட் பகுதி சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
Similar News
News November 1, 2025
ஈரோட்டில் இலவச லாரி ஓட்டுநர் பயிற்சி!

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி, சரக்கு வாகனம், ஓட்டும் பயிற்சி, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News November 1, 2025
ஈரோடு: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

ஈரோடு மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News November 1, 2025
கோபி அருகே பெண் சடலம் மீட்பு

கோபி அருகே வாழைத்தோட்டத்தில் உடல் வெளியே தெரிந்த நிலையில் பெண் உடல் புதைக்கப்பட்டிருந்தது. தகவல் கிடைத்த காவல்துறையினர் உடலை தோண்டி எடுத்து பார்வையிட்டனர். 35 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்து, தலை பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலைக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


