News September 15, 2024
ஈரோட்டில் இவ்வளவு பேர் ஆப்சென்ட்டா?

தமிழ்நாட்டில் குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்றது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 25,475 பேர் குரூப் 2 தேர்வு விண்ணப்பித்திருந்தனர். இதில் 18,943 பேர் தேர்வு எழுதினர். 6,532 பேர் தேர் எழுத வரவில்லை. மேலும் ஈரோடு – தெற்குப்பள்ளம், தி பாரதி வித்யா பவன் பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வினை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
Similar News
News November 19, 2025
அந்தியூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிந்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், இருசக்கர வாகனத்தில் அந்தியூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பிரம்மதேசம் பெட்ரோல் பங்க் அருகே, ராஜ்குமார் என்பவர் வாகனம் மோதி பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 19, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, கே.கே.நகா், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், பெரியசடையம்பாளையம் முத்தம்பாளையம், சிப்காட், சின்ன (ம) பெரிய வேட்டுவபாளையம், மோளகவுண்டன்பாளையம், போக்குவரத்து நகா், சோலாா் புதூா், நகராட்சி நகா், மேக்கூா், பெருந்துறை மேற்குப்பகுதி, கோவை சாலை, சின்ன(ம) பெரியமடத்துபாளையம், உட்பட பல ஆகிய பகுதிகளில் நாளை நவ.20 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது
News November 19, 2025
ஈரோடு: கஞ்சா சாக்லெட்டு கடத்தியவர் கைது!

ஈரோடு மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமிராணி தலைமையிலான காவல்துறையினர், ஈரோடு ரயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா சாக்லெட்டுகளை கடத்தி வந்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த மதன்குமார் (23) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


