News August 10, 2024
ஈரோட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக இன்றைய தினம் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்றைய தினம்
கனமழைக்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Similar News
News November 15, 2025
அந்தியூர் அருகே இளைஞர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்

அந்தியூர் அருகே உள்ள நகலூர் வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் வயது 25 இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் உயிர் இழந்தார் இது குறித்து அந்தியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News November 15, 2025
பேக்கரியில் திருடியவர் கைது

கூலமூக்கனூர் கோவிலுக்கு வந்த ஒரு பெண் மதுபோதையில் நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த கவினை சந்தித்தார். இது தொடர்பாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் அருகிலுள்ள பேக்கரியில் இருந்து இரு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை திருடியிருப்பது தெரிய வந்தது. சிறுவலூர் போலீசார் குற்றச்செய்தியை விசாரித்து அவரை கைது செய்தனர்.
News November 15, 2025
சென்னிமலை அருகே சோகம் வீட்டு நாயால் வந்த வினை

சென்னிமலை, வெள்ளோடு அடுத்துள்ள கனகபுரம் வேப்பங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி நாகராஜ் – சரோஜா தம்பதி இவர்கள் இளைய மகன் ரமேஷ் வயது 22 , இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷை அவரது வீட்டில் வளர்த்த வளர்ப்பு நாய் கடந்த 20 நாட்களுக்கு முன் கடித்து விட்டது. அவர் தடுப்பூசி போட்டும் அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.


