News August 17, 2024
ஈரோடு: 60 ஆண்டு கனவு இன்று நனவாகிறது!

ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். பவானி நீரேற்று நிலையப் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,450 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
Similar News
News December 5, 2025
ஈரோடு: சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!

உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது அவசியம், இதில் எழுத்துக்கள் (பெரிய, சிறிய) எண்கள் மற்றும் குறியீடுகளின் கலவை இருக்க வேண்டும், மேலும் பொதுவான சொற்கள் அல்லது தொடர்ச்சியான எழுத்துக்களைத் தவிர்க்க வேண்டும், என மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வும், சந்தேகம் இருந்தால் சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண். 1930 டயல் செய்யவும்
News December 5, 2025
ஈரோடு: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

ஈரோடு மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News December 5, 2025
ஈரோடு: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


