News November 22, 2024

ஈரோடு: 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

image

சூழலியல் மாற்றம் காரணமாக தற்போது மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 20 நாட்களில், மாநகராட்சி பகுதியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், போதிய மருந்துகள் இருப்பில் உள்ளது என மாநகர நகர்நல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 13, 2025

கோபி: வசமாக சிக்கிய து.வட்டாட்சியர் அதிரடி கைது!

image

கோபிசெட்டிபாளையம் அடுத்த கலிங்கயம் விஏஓ சசிகுமார் பணியாற்றி வருகிறார். இவர் மொடச்சூரை சேர்ந்த ஜெயாவிடம் பட்டாவில் பெயர் சேர்க்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ரசாயனம் தடவியை பணத்தை கொடுத்து அனுப்பி பிடித்து விசாரணை நடத்தியதில் கோபி துணை வட்டாட்சியர் மணிமேகலை, விஏஓ சசிகுமார் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 13, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவுறை!

image

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கோ அல்லது வீட்டை விட்டு வெளியில் சென்று தங்கும் சந்தர்ப்பங்களில் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுமாறும் அறிவுறிதியுள்ளது. மேலும் வீட்டில் யாராவது தனியாக இருந்தாலோ அல்லது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பணம், நகை கொள்ளை அடிக்காமல் இருக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தெரிவிக்க மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

News November 12, 2025

ஈரோட்டில் நடைபெற்று SIR திருத்த பணியை கலெக்டர் ஆய்வு!

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி ஈரோடு மாவட்டம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகின்றனர். ஈரோடு சத்தியமூர்த்தி வீதியில் நடைபெறும் வாக்காளர் திருத்த கணக்கிட்டு படிவம் வழங்கும் பணியை ஆட்சியர் கந்தசாமி என்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்

error: Content is protected !!