News October 25, 2024

ஈரோடு: 249 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி

image

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவந்துள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இணையதளம் மூலம் மொத்தம் 265 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி 249 கடைகளுக்கு அனுமதியும், 7 கடை விண்ணப்பங்கள் நிராகரிப்பும், மீதமுள்ள 9 கடை விண்ணப்பங்கள் தொடர்பாக ஆய்வு நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News November 23, 2025

திம்பம் மலைப்பாதையில் விபத்து

image

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை 27 கொண்டைஊசி வளைவுகளை அடக்கியது. மலைப்பாதையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வாழைக்காய் பாரம் ஏற்றுக் கொண்டு மினி சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

News November 23, 2025

ஈரோட்டில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்படி காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டறிந்தனர். வீட்டிற்குள் சோதனை செய்தபோது ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தனுஷ் ,குரு பிரகாஷ் இருவரை கைது செய்தனர்.

News November 23, 2025

தாளவாடி அருகே சோகம்! முதியவர் உயிரிழப்பு

image

தாளவாடி அடுத்த பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெள்ளையா (65) இவர் அருகிலுள்ள தமிழ்புரம் பகுதிக்கு ரோடு போடும் வேலைக்காக சென்றுள்ளார். அங்கிருந்த தொழிலாளர்களிடம் பாத்ரூம் சென்று விட்டு வருவதாக கூறி குட்டைக்கு சென்றவர் நீண்ட நேரமாக வராததால் தொழிலாளர்கள் குட்டைக்கு சென்று பார்த்த போது பெள்ளையா இறந்து கிடந்துள்ளார். தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!