News August 24, 2024

ஈரோடு: லாரிகள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் – பர்கூர் மலைப்பாதையில்
தட்டகரை அரசு பள்ளி அருகில் கர்கேகண்டி நோக்கி சென்ற சிமெண்ட் லாரியும், ராமாபுரம் பகுதியில் இருந்து தக்காளி ஏற்றி வந்த ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லாரி ஓட்டுநருக்கு தலை, கை காலில் காயம் ஏற்பட்டது. ஈச்சர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 16, 2025

ஈரோட்டில் வசமாக சிக்கிய திருடன்!

image

ஈரோடு தொப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனது வீட்டின் வெளியே லாரியை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அதிகாலை 3 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, லாரியில் இருந்த பேட்டரியை சக்திவேல் என்பவர் கழட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மடக்கிப்பிடித்து பவானிசாகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News November 15, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News November 15, 2025

ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!