News April 13, 2025
ஈரோடு: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டத்தில் தனியார் கடைகள், வர்த்தக, உணவு நிறுவனங்கள், மே 15க்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். இந்த பெயர் பலகை தமிழில் முதன்மையாகவும், பின் ஆங்கிலத்திலும், அதன் பின் விரும்ப மொழியிலும் அமைக்கலாம். கால அவகாசத்திற்கு பின் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களை ஆய்வு செய்து விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
Similar News
News April 16, 2025
ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை

வாட்ஸ்அப் மூலம் மோசடி நடைபெறுவதாக ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி நபர்கள், போலி வாட்ஸ்அப் அழைப்புகள், செய்திகள் மூலம் பயனர்களிடம் இருந்து பணம் பறிப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், பயனர்கள் தங்கள் OTP, தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சைபர் குற்றங்களை புகாரளிக்க 1930 (24×7) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News April 16, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக மகுடேஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 16, 2025
பார்மஸிஸ்ட் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி !

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மருந்தாளுநர் (பார்மஸிஸ்ட்) பணிபோட்டி தேர்வுகளுக்கான இணைய வழி இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 0424-2275860, 9499055943 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !