News August 8, 2024

ஈரோடு மாநில அளவில் 2வது இடம்

image

மாநில அளவிலான எறிபந்து போட்டி ஈரோட்டில் 2 நாட்கள் நடந்தது. இதில் ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னை, கரூர், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில், 24 அணிகள், பெண்கள் பிரிவில், 23 அணிகள் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில், கரூர் அணி தொடர்ந்து 5வது முறையாக வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இரண்டாம் இடத்தை ஈரோடு அணி பெற்றது.

Similar News

News November 11, 2025

ஈரோடு: நல்ல சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

image

ஈரோட்டில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Civil Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு சிவில் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE செய்யவும்.

News November 11, 2025

பவானி: தாயை கல்லால் அடித்துக் கொலை செய்த மகன்

image

பவானி அருகே மயிலம் பாடி சானார் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராக்கம்மாள்(65) என்பவரை அவரது மகன் பழனிச்சாமி 45 என்பவர் குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். உயிரிழந்த ராக்கம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணைக்கு பின்னர் பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

News November 11, 2025

ஈரோடு: சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

image

ஆன்லைன் டாஸ்க் என்பது இணையம் சார்ந்த குற்றங்களைக் குறிக்கிறது, இதில் கணினிகள் மற்றும் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி மோசடி, அடையாள திருட்டு போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது Cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!