News April 29, 2025

ஈரோடு மாநகராட்சியில் சலுகை பெற நாளை கடைசி

image

ஈரோடு மாநகராட்சியில் 2025-2026ம் நிதியாண்டிற்கான வரி செலுத்துவதில் 5 சதவீதம் ஊக்கத்தொகைபெற நாளை ஏப்.30ம் தேதி கடைசி நாளாகும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தப்படி, சொத்து வரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற நாளை கடைசி நாளாகும். எனவே, மாநகராட்சியின் அனைத்து வசூல் மையங்கள் இன்றும், நாளைக்கும் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News November 22, 2025

ஈரோடு: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<> nlm.udyamimitra.in <<>>என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 22, 2025

மொடக்குறிச்சி அருகே சிமெண்ட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து

image

ஈரோடு முத்தூர் மெயின் ரோட்டில் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராதமாக விதமாக அந்த வழியே வந்த சிமெண்ட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் தப்பினர் இது குறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News November 22, 2025

அந்தியூரில் பெண்ணிடம் பணம் பறித்த இருவர் கைது!

image

அந்தியூர் கொல்லம்பாளையம் சுரேஷ் என்பவர் மனைவியிடம் திருவண்ணாமலையை சேர்ந்த பிரியங்கா,செல்வத்துரை ஆகிய இருவர், குழந்தை பிறக்கும் மாத்திரை என கொடுத்துள்ளனர். மாத்திரை சாப்பிட்ட சுரேஷின் மனைவி மயக்கம் அடைந்த நிலையில் இருவரும் அவரிடம் இருந்த ரூ.25000 பணத்தை எடுத்து தப்பி விட்டனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியங்கா,செல்வத்துரை ஆகிய இருவர் கைது செய்தனர்.

error: Content is protected !!