News April 21, 2025
ஈரோடு: மயங்கி விழுந்த கட்டிட தொழிலாளி பலி!

ஈரோடு, அத்தாணி அருள்வாடிபுதூரைச் சேர்ந்தவர் முருகன் (55) கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து, உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 28, 2025
அம்மாபேட்டை அருகே வசமாக சிக்கிய இருவர்

அம்மாபேட்டை அருகே சொட்டையனூர் பிரிவு பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை கடத்த முயன்ற சங்ககிரி பகுதியை சேர்ந்த சக்திவேல் 32 மற்றும் சித்தார் பகுதியை சேர்ந்த முனியசாமி 50 ஆகிய இருவரை பிடித்த அம்மாபேட்டை போலீசார் 10 கிலோ குட்கா பாதை பொருட்களை பறிமுதல் செய்து இருவரும் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
News November 28, 2025
ஈரோடு பெண் கொலை வழக்கில் திருப்பம்!

ஈரோடு சூலை எல் வி ஆர் காலனியை சேர்ந்தவர் கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட நபர் நேற்று அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததோடு கழுத்தில் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்தார். இந்த சம்பவத்தில் போலீசார் மதுரையைச் சேர்ந்த ராமர் என்பவரை கோவையில் வைத்து மடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கொலையாளியை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
News November 28, 2025
ஈரோடு பெண் கொலை வழக்கில் திருப்பம்!

ஈரோடு சூலை எல் வி ஆர் காலனியை சேர்ந்தவர் கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட நபர் நேற்று அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததோடு கழுத்தில் அணிந்திருந்த நகையை கொள்ளையடித்தார். இந்த சம்பவத்தில் போலீசார் மதுரையைச் சேர்ந்த ராமர் என்பவரை கோவையில் வைத்து மடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கொலையாளியை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


