News April 21, 2025

ஈரோடு: மயங்கி விழுந்த கட்டிட தொழிலாளி பலி!

image

ஈரோடு, அத்தாணி அருள்வாடிபுதூரைச் சேர்ந்தவர் முருகன் (55) கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து, உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 17, 2025

ஈரோடு: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

ஈரோடு மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

News November 17, 2025

ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (அ) ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News November 17, 2025

ஈரோட்டில் வசமாக சிக்கிய நபர் அதிரடி கைது!

image

வெள்ளிதிருப்பூர் நாகிரெட்டிபாளையத்தில் கேரளா லாட்டரி விற்பதாக மாவட்ட எஸ்.பி தனிப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த சண்முகம் (55) என்பவர் பிடித்து விசாரித்ததில் அவரிடமிருந்து கேரளா லாட்டரிகள் 24 பணம் 4,800 ஆண்ட்ராய்டு செல்போன் 1 ஆகியவையுடன் சண்முகத்தை வெள்ளித்திருப்பூர் காவல்துறையினர் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!