News April 21, 2025
ஈரோடு: மயங்கி விழுந்த கட்டிட தொழிலாளி பலி!

ஈரோடு, அத்தாணி அருள்வாடிபுதூரைச் சேர்ந்தவர் முருகன் (55) கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து, உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 23, 2025
கோபி அருகே வசமாக நபர்: அதிரடி கைது

கோபி மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் பர்கூர் தட்டக்கரை பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர். அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த கௌரிசங்கர் (32) மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News November 23, 2025
ஈரோடு: 10வது படித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

ஈரோடு மக்களே, மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுப்பிரிவில் பல்நோக்கு ஊழியர் (Multi Tasking Staff) பதவியில் மொத்தம் 362 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News November 23, 2025
ஈரோடு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ஈரோடு மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியபடுத்துங்க.


