News December 4, 2024
ஈரோடு: மனுநீதி நாள் முகாம்

தாளவாடி தாலுகாவுக்கு உட்பட்ட தலைமலையில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில், மனுநீதி நாள் முகாம் வரும் 11-ம் தேதி பகல் 11 மணிக்கு நடக்கிறது. இதில் அனைத்து துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்பதால், மலைக்கிராம மக்கள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து, பயன் அடையலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
ஈரோடு: 10 PASS போதும்..! ரூ.50,000 வரை சம்பளம்

ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)
News November 7, 2025
ஈரோடு: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News November 7, 2025
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 14 பேரை இபிஎஸ் கட்சியை விட்டு நீக்கியுள்ளார். அதில், EX.எம்.பி. சத்தியபாமா, ஒன்றிய செயலாளர்கள் தம்பி (எ) சுப்பிரமணியம் (நம்பியூர்), குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்) ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், முன்னாள் யூனியன் சேர்மன்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, எஸ்.எஸ்.ரமேஸ் உள்ளிட்ட 14 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.


