News April 17, 2025
ஈரோடு: தொழில் நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை!

ஈரோடு ஈஸ்வரன் கோவில், ஸ்ரீ ரங்கா வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் (72). ஜவுளி தொழில் செய்து வந்த இவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, கத்தியை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 18, 2025
சத்தியமங்கலம்: விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை

சத்தியமங்கலம் செண்பகநாயக்கர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்தார். தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
சத்தியமங்கலம்: விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை

சத்தியமங்கலம் செண்பகநாயக்கர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்தார். தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
ஈரோடு காவல்துறை எச்சரிக்கை!

ஆன்லைன் ஷாப்பிங்கின் போது உங்கள் பணப்பையைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பாதுகாப்பான, நம்பகமான தளங்களில் ஷாப்பிங் செய்யுங்கள், பொது வைஃபை இணைப்புகளைத் தவிர்க்கவும், மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது விளம்பரங்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர். மேலும் சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண். 1930 தொடர்பு கொள்ளவும்.


