News April 17, 2025
ஈரோடு: தொழில் நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை!

ஈரோடு ஈஸ்வரன் கோவில், ஸ்ரீ ரங்கா வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் (72). ஜவுளி தொழில் செய்து வந்த இவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, கத்தியை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 19, 2025
ஈரோடு: கஞ்சா சாக்லெட்டு கடத்தியவர் கைது!

ஈரோடு மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமிராணி தலைமையிலான காவல்துறையினர், ஈரோடு ரயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா சாக்லெட்டுகளை கடத்தி வந்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த மதன்குமார் (23) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
News November 18, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 18, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, உலகபுரம், வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம், சென்னிமலைபாளையம், அவல்பூந்துறை, கவுண்டச்சிபாளையம், தண்ணீர்பந்தல், ஊஞ்சப்பாளையம், மைலாடி, வேமாண்டம்பாளையம், பெருந்துறை தெற்கு, ஈங்கூர், வெள்ளோடு, கொங்கு, நந்தா கல்லூரி, மூலக்கரை, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


