News April 17, 2025

ஈரோடு: தொழில் நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை!

image

ஈரோடு ஈஸ்வரன் கோவில், ஸ்ரீ ரங்கா வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் (72). ஜவுளி தொழில் செய்து வந்த இவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, கத்தியை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

Similar News

News November 17, 2025

பவானி அருகே வேன் கவிழ்ந்து விபத்து!

image

பவானி அருகே மூன்றுரோடு பகுதியில் பவானியில் இருந்து மேட்டூர் நோக்கி ஈரோடு–மேட்டூர் பிரதான சாலையில் சென்ற மினி டெம்போ வேன் , திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் எதிர்திசையில் உள்ள புளியமரத்தை மோதி, பின்னர் ஒருபுறமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் டெம்போ ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 17, 2025

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்-100 க்கும், சைபர் கிரைம் எண்-1930 க்கும், குழந்தைகள் உதவி எண்-1098 எண்களும், போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News November 16, 2025

ஈரோடு: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு எச்சரிக்கை!

image

தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பது மற்றும் மீட்பு செய்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது முக்கிய முன்னுரிமையாக உள்ளது.
குழந்தைகள் பணம் சம்பாதிக்காமல், பள்ளிக்கு சென்று அறிவை சம்பாதிக்கட்டும் என மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

error: Content is protected !!