News October 24, 2024
ஈரோடு: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், நாளை (அக்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம். மேலும் தகவலுக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 86754 12356, 94990 55942 எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
ஈரோட்டில் கோடிக்கணக்கில் மோசடி: அதிரடி கைது

ஈரோடு சத்தி ரோடு பகுதியில், முகிம் கிளாஸ் ஹவுஸ் பெயரில் ஹார்டுவேர் கடை வைத்து நடத்தி வருபவர் முகிம் கான். இவரிடம் சூப்பர்வைசராக பணியாற்றிய ஆதில் கான், அவரது முதலாளி முகில் கான் வங்கிக் கணக்கை பராமரித்து வந்துள்ளார். தன்னுடைய வங்கிக்கு அவரது முதலாளியின் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை மோசடியாக மாற்றி தலைமறைவானார். இது தொடர்பான புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆதில் கானை கைது செய்தனர்.
News November 28, 2025
செங்கோட்டையனுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கோபி முன்னாள் எம்.எல்.ஏ செங்கோட்டையன் நேற்று தவெகவில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 28 பேர் கொண்ட உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படவுள்ளார். மேலும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
News November 28, 2025
செங்கோட்டையனுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கோபி முன்னாள் எம்.எல்.ஏ செங்கோட்டையன் நேற்று தவெகவில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 28 பேர் கொண்ட உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படவுள்ளார். மேலும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


