News August 26, 2024

ஈரோடு: டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

ஈரோடு: பர்கூர் தாழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் லாரி டிரைவரான மாதேவன். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு லாரி வாங்கி ஓட்டி வந்ததாகவும், அதில் கடன் ஏற்பட்டு லாரியை விற்ற நிலையில், கடன் தொந்தரவு தாங்க முடியாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கட்டி சமுத்திரம் ஏரி பகுதியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 27, 2025

ஈரோடு: ஹோட்டலில் பிரச்னையா? WHAT’S APP பண்ணுங்க

image

ஈரோடு மாவட்டத்தில் சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது ஈரோடு உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

ஈரோடு: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

பெருந்துறை அருகே சோகம்: டெய்லர் பலி

image

பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜு, 59; இப்பகுதியில் ஒரு கார்மெண்ட் நிறுவனத்தில் டைலராக வேலை செய்தார். நேற்று வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!