News September 14, 2024

ஈரோடு: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி (செவ்வாய்கிழமை) மிலாது நபியை முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 22, 2025

ஈரோடு: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று 21-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெற்றது. இதில் விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகளை மனுக்களாக பெற்ற, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News November 22, 2025

ஈரோடு: போலி டிஜிட்டல் திருமண அழைப்பிதழ் மோசடி!

image

ஈரோடு காவல்துறை சார்பாக அறிவுரை அழைப்பிதழ்களை வாட்ஸ்அப்பில் கோப்புகளாக மக்களுக்கு அனுப்புகின்றனர். இது போன்ற கோப்புகளை பதிவிறக்குவதன் மூலம் உங்கள் மொபைலில் மால்வேர் வைரஸைக் கொண்டு வருகின்றனர். பின்னர் சைபர் குற்றவாளிகள் உங்களின் அனைத்து தகவல்களையும் திருடுகின்றனர்.தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் திருமண அழைப்பிதழ் வந்தால், அதை கிளிக் செய்ய வேண்டாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுரை!

News November 22, 2025

ஈரோட்டிற்கு முதல்வர் வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

image

தமிழக முதல்வர் தலைவர் மு.க ஸ்டாலின் 26 ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பெருந்துறை வழியாக முதல்வர் செல்லக்கூடிய பாதையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா இன்று ஆய்வு செய்தார். மேலும், முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கிற மக்கள் ,கட்சி நிர்வாகிகள் நிற்கக்கூடிய பகுதியையும் எஸ்பி ஆய்வு செய்தார் அவருடன் ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளர் தோப்பு .வெங்கடாசலம் உடன் இருந்தார்.

error: Content is protected !!