News March 26, 2025
ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் குறித்த முக்கிய அறிவிப்பு

ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் மார்க்கத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக இம்மார்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில், குறிப்பிட்ட நாட்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108), வரும் 29, 30ம் தேதிகளில் ஈரோட்டில் இருந்து சேலம் வழியே திருப்பத்தூர் வரை மட்டும் இயக்கப்படுகிறது.
Similar News
News December 7, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச. 07) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News December 7, 2025
சேலம்: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை!

சேலம் மக்களே, India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <
News December 7, 2025
சேலம்: திருமண வாழ்வில் சோகம்!

சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகையன். இவருடைய மனைவி காந்திமதி (28), நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார், காந்திமதியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அதில் திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச் காந்திமதி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


