News March 26, 2025
ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் குறித்த முக்கிய அறிவிப்பு

ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் மார்க்கத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக இம்மார்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில், குறிப்பிட்ட நாட்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108), வரும் 29, 30ம் தேதிகளில் ஈரோட்டில் இருந்து சேலம் வழியே திருப்பத்தூர் வரை மட்டும் இயக்கப்படுகிறது.
Similar News
News April 2, 2025
சேலம்: வெயிலில் வேலை செய்வோர் கவனத்திற்கு!

சேலம் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!
News April 2, 2025
1,777 அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள்!

படிக்கட்டு பயணத்தை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழங்ககளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் தானியங்கி கதவு அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் கோட்டத்தில் இதுவரை 1,777 பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மீதியுள்ள 891 பஸ்களுக்கு தானியங்களி கதவு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறினர்.
News April 2, 2025
சேலத்தில் வேலை! இன்றே கடைசி..

சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் இன்று ஏப்.,2ஆம் தேதிக்குள், <