News August 25, 2024
ஈரோடு: சாதியை சொல்லி அடித்த இருவர் கைது

கோபி அடுத்த
கலிங்கியம் ஊராட்சி தூய்மை காவலராக இருப்பவர் ராமச்சந்திரன். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி, தங்கராஜ் ஆகியோர் செல்போன் வாங்கிக் கொண்டு திருப்பி தர மறுத்து சாதியை சொல்லி திட்டி அடித்துள்ளனர். புகாரின்பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து டிஎஸ்பி சீனிவாசன் விசாரணை செய்து இருவரையும் கைது செய்தார்.
Similar News
News February 23, 2026
ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News February 23, 2026
ஈரோடு: உங்க வீட்டில் குழந்தை இருக்கா? முக்கிய தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் பிப்.23 முதல் 28 வரை (புதன் நீங்கலாக), வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இது வழங்கப்படும். கண் பார்வை குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார். SHAREIT
News February 23, 2026
திண்டல் முருகன் கோயில்: 207 அடி உயர சிலைக்கு அடிக்கல்!

ஈரோடு, திண்டல் வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ரூ.5 கோடி மதிப்பிலான 5 நிலை ராஜகோபுரம் மற்றும் புதிய சன்னதிகளுக்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு முன்னிலையில் குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து, இக்கோயிலில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள பிரமாண்டமான 207 அடி உயர முருகன் சிலை பணிகளுக்கும் அமைச்சர்கள் இன்று அடிக்கல் நாட்டினர்.


