News August 25, 2024

ஈரோடு: சாதியை சொல்லி அடித்த இருவர் கைது

image

கோபி அடுத்த
கலிங்கியம் ஊராட்சி தூய்மை காவலராக இருப்பவர் ராமச்சந்திரன். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி, தங்கராஜ் ஆகியோர் செல்போன் வாங்கிக் கொண்டு திருப்பி தர மறுத்து சாதியை சொல்லி திட்டி அடித்துள்ளனர். புகாரின்பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து டிஎஸ்பி சீனிவாசன் விசாரணை செய்து இருவரையும் கைது செய்தார்.

Similar News

News January 11, 2026

ஈரோடு: பொங்கல் பரிசு முக்கிய தகவல்!

image

ஈரோடு மக்களே பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 0424-2252052 (அ) 1800-425-5901ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 11, 2026

ஈரோடு: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஜன.11) காலை முதல் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இம்மழையால் உங்கள் வீடு அல்லது தெரு பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் உடனே TNEB Customer Care எண்ணான 94987-94987 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்தால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் மின்சார வாரியம் சார்பில் சரிசெய்யப்படும். (இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க)

News January 11, 2026

UPDATE: ஈரோட்டிற்கு மழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று(ஜன.11) காலை முதல் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. (மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் போங்க)

error: Content is protected !!