News August 25, 2024

ஈரோடு: சாதியை சொல்லி அடித்த இருவர் கைது

image

கோபி அடுத்த
கலிங்கியம் ஊராட்சி தூய்மை காவலராக இருப்பவர் ராமச்சந்திரன். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி, தங்கராஜ் ஆகியோர் செல்போன் வாங்கிக் கொண்டு திருப்பி தர மறுத்து சாதியை சொல்லி திட்டி அடித்துள்ளனர். புகாரின்பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து டிஎஸ்பி சீனிவாசன் விசாரணை செய்து இருவரையும் கைது செய்தார்.

Similar News

News December 30, 2025

ஈரோட்டில் தொழிலாளா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

ஈரோட்டில், தொழிலாளா்கள் நல நிதி செலுத்தும் தொழிலாளா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் கே.ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் சென்னை-600006 க்கு டிச.31க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

News December 30, 2025

ஈரோட்டில் இலவசம்: மக்களே முந்துங்கள்!

image

சித்தோடு, கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, இலவச கம்பியூட்டர் டேலி (Computer Tally) (ஆண்/பெண்) பயிற்சி வரும் 9-1-2026முதல் 26-2-2026 வரை நடைபெற உள்ளது. இதில், பயிற்சி, சீருடை, உணவு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 87783-23213, 72006-50604, 0424-2400338 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 30, 2025

கொடிவேரி அணையில் வாலிபர் பலி

image

உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது நண்பர்களுடன் சேலம் சுற்றுலா சென்று விட்டு வரும்பொழுது மது வாங்கிக்கொண்டு கொடிவேரி அணை பாலத்தில் அமர்ந்து குமரகுரு, தினேஷ், விக்னேஷ், ராஜா கார்த்தி ஆகிய 5 பேரும் மது அருந்தி உள்ளனர். அப்பொழுது 4 பேரும் காரில் தூங்கிய நிலையில் கார்த்தி பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்தி மதுபோதையில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை.

error: Content is protected !!