News May 7, 2025
ஈரோடு: குழந்தை பாக்கியம் தரும் கஸ்தூரி ரங்கர்

ஈரோடு மாவட்டம் நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கஸ்தூரி ரங்கன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கஸ்தூரி ரங்கர் அனந்த சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், கோப குணம் மாறும், மன நிம்மதி உண்டாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News October 29, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு!

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், டெலிகிராம் வழியாக வரும் பகுதி நேர வேலைக்கான குறுஞ்செய்திகள் மற்றும் இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்த மோசடிகளில், பணம் சம்பாதிப்பதாகக் கூறி, ஆரம்பத்தில் சிறிய தொகைகளை செலுத்துமாறு கேட்பார்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருடுவார்கள். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இலவச எண். 1930 தொடர் கொள்ளலாம் என காவல்துறை அறிவிப்பு!
News October 29, 2025
கவுந்தப்பாடி அருகே கடனால் நேர்ந்த சோகம்

கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனியார் பைனான்சில் 2017-ம் ஆண்டு ரூ.8 லட்சம் கடன் பெற்றுள்ளார். மாத தவணையாக ரூ.8,000 கட்டி வந்துள்ளார். கோவிட் காலத்தில் சரிவர வேலை இல்லாததால் கடன் தொகையை கட்ட முடியாமல் சிக்கி தவித்துள்ளார். அதன் காரணமாக கடனை அடைக்க முடியாமல் புலம்பி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News October 29, 2025
நம்பியூர் அருகே சிறுமிக்கு டார்ச்சர்!

நம்பியூர் அடுத்த பெரியபீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் அப்குதியை சேர்ந்த சிறுமியை கடந்த 1 வருடமாக காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று விக்னேஷ் மீண்டும் சிறுமியின் வீட்டுக்கு மதுபோதையில் சென்று தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். அவரது பெற்றோர் அளித்த புகாரின்படி விக்னேஷை கைது செய்தனர்.


