News January 2, 2025
ஈரோடு: கீழே விழுந்து மின் ஊழியர் பலி!

கோபி அருகே கொளப்பள்ளூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் கெட்டி செவியூர் மின்வாரிய அலுவலகத்தில், பணியாற்றி வருகிறார். கெட்டிசெவியூர் அரசு பள்ளி அருகே உள்ள, மின் கம்பத்தில், பழுது பார்க்க ஏறும் போது, 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தவர், தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
ஈரோட்டில் 3,717 கொடிக்கம்பங்கள் அகற்றம்

தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள், சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதன் படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை அரசியல் கட்சிகள், ஜாதி, மத,பொது அமைப்பு, சங்கங்கள் சார்ந்த 3,717 எண்ணிக்கையில் அகற்றப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு என்ன தகுதிகள்!

▶️கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஈரோட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் ▶️தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் ▶️21முதல் 32 வயது வரை இருக்கலாம் ▶️மிதிவண்டி அல்லது இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும் ▶️ஆகஸ்ட் 8 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்▶️இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக(VAO) பதவி உயர்வு வழங்கப்படும்.ஷேர் பண்ணுங்க!
News July 9, 2025
ஈரோட்டில் கிராம உதவியாளர் வேலை!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 141 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ.11,100 -35,100 வரை வழங்கப்படும். இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் <