News December 4, 2024
ஈரோடு கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு

கோவை, திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்பக்கலைஞர்கள் தங்களது படைப்புகளை சந்தைப்படுத்தி, காட்சிப்படுத்தி பரிசுகளை அள்ளலாம். இதில் முதல் 7 கலைஞர்களுக்கு ரூ.5000, 2ஆம் பரிசு ரூ.3,000, 3ஆம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். இதற்கு தங்களது படைப்புகளை டிச.10ஆம் தேதிக்குள் மண்டல கலை பண்பாட்டு மையம், அரசு இசைக்கல்லூரி வளாகத்திற்கு அனுப்பவும். மேலும், விவரங்களுக்கு 94422-13864 என்ற எண்ணை அழைக்கலாம்.
Similar News
News November 27, 2025
அந்தியூரில் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் சீண்டல்

அந்தியூரில் இருந்து இன்று காலை ஈரோடு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது பேருந்தில் 15 வயது சிறுமி பயணித்துள்ளார். அந்த சிறுமியிடம் பேருந்தின் நடத்துனர் மற்றும் உதவியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். தொடர்ந்து பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் நடத்துனர் மற்றும் உதவியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News November 27, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 26, 2025
ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை!

ஈரோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பத்தை https://erode.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கலாம். விண்ணப்பத்தை நிரப்பி நேரிலோ (அ) தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுகொள்ளலாம். மேலும் நவ.22 முதல் டிச.06 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


