News December 4, 2024
ஈரோடு கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு

கோவை, திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்பக்கலைஞர்கள் தங்களது படைப்புகளை சந்தைப்படுத்தி, காட்சிப்படுத்தி பரிசுகளை அள்ளலாம். இதில் முதல் 7 கலைஞர்களுக்கு ரூ.5000, 2ஆம் பரிசு ரூ.3,000, 3ஆம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். இதற்கு தங்களது படைப்புகளை டிச.10ஆம் தேதிக்குள் மண்டல கலை பண்பாட்டு மையம், அரசு இசைக்கல்லூரி வளாகத்திற்கு அனுப்பவும். மேலும், விவரங்களுக்கு 94422-13864 என்ற எண்ணை அழைக்கலாம்.
Similar News
News November 19, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, கே.கே.நகா், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், பெரியசடையம்பாளையம் முத்தம்பாளையம், சிப்காட், சின்ன (ம) பெரிய வேட்டுவபாளையம், மோளகவுண்டன்பாளையம், போக்குவரத்து நகா், சோலாா் புதூா், நகராட்சி நகா், மேக்கூா், பெருந்துறை மேற்குப்பகுதி, கோவை சாலை, சின்ன(ம) பெரியமடத்துபாளையம், உட்பட பல ஆகிய பகுதிகளில் நாளை நவ.20 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது
News November 19, 2025
ஈரோடு: கஞ்சா சாக்லெட்டு கடத்தியவர் கைது!

ஈரோடு மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமிராணி தலைமையிலான காவல்துறையினர், ஈரோடு ரயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா சாக்லெட்டுகளை கடத்தி வந்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த மதன்குமார் (23) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
News November 18, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.


