News August 6, 2024

ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், ஊரக பகுதி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் 2016-17 முதல் 2021-22 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள் மற்றும் ஆவணங்களை சமூக தணிக்கை மேற்கொண்டு சமூக தணிக்கை வரும் 9ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் 13 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை நடைபெற உள்ளது. அதற்கான இடம், நேரம் தொடர்புடைய கிராம ஊராட்சி மூலம் அறிவிக்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News September 19, 2025

ஈரோட்டில் லஞ்சம் கேட்டா உடனே Call!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dsperddvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது என்ற 0424-2210898 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News September 19, 2025

ஈரோடு: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

image

ஈரோடு மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<>ரயில் ஒன்<<>>’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இனி தினசரி ரயில் பயணிகள் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அப்புறம்.., தீபாவளிக்கு டிக்கெட் போட்டாச்சா..?

News September 19, 2025

ஈரோடு: வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை!

image

ஈரோடு: சிவகிரி அடுத்த அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (31). கோழிக்கடையில் வேலைபார்த்து வந்த இவருக்கு கடந்த 16ஆம் தேதி கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும், வலி சரியாகவில்லை எனத் தெரிகிறது. இதனால் வீட்டில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!