News April 20, 2025

ஈரோடு: ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு, நலவாரியங்களில் பதிவு பெற்ற 60வயது நிறைவடைந்த 11,000 மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்காக ஆண்டு ஆயுள் சான்றை இந்த <>லிங்க்<<>> மூலம், உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

Similar News

News November 27, 2025

அந்தியூரில் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் சீண்டல்

image

அந்தியூரில் இருந்து இன்று காலை ஈரோடு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது பேருந்தில் 15 வயது சிறுமி பயணித்துள்ளார். அந்த சிறுமியிடம் பேருந்தின் நடத்துனர் மற்றும் உதவியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். தொடர்ந்து பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் நடத்துனர் மற்றும் உதவியாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News November 27, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News November 26, 2025

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை!

image

ஈரோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பத்தை https://erode.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கலாம். விண்ணப்பத்தை நிரப்பி நேரிலோ (அ) தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுகொள்ளலாம். மேலும் நவ.22 முதல் டிச.06 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!