News April 18, 2025

ஈரோடு: ஆற்றில் மூழ்கி தொழிலாளர் பலி!

image

ஈரோடு, அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம், ஆண் சடலம் ஒன்று இருந்தது. அதை அம்மாபேட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்தபர், பாலமலை பகுதியைச் சேர்ந்த சித்தன் (57) என்பதும், ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதி சென்று, முழ்கி உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Similar News

News April 21, 2025

தாளவாடி: கணவனை கொன்ற மனைவி!  

image

தாளவாடி, மல்லன்குழியை சேர்ந்தவர் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மல்லன்குழிக்கு நேற்று வந்த தங்கவேலு, தனது இரு மகன்களையும் அழைத்துச் செல்வதாக ரேவதியிடம் கூறியுள்ளாா். இதில் இருவருக்கும் சண்டை வர ரேவதி கல்லை தங்கவேல் தலையில் போட்டு கொன்றுள்ளார். தாளவாடி போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 21, 2025

ஈரோடு மாநகராட்சி (ம) நகராட்சி ஆணையர் எண்கள்

image

▶️ஈரோடு மாநகராட்சி ஆணையர் 0424-2258312. ▶️ பவானி நகராட்சி ஆணையர் 04256-230556. ▶️ கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் 04285-222159. ▶️சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர் 04295-220513. ▶️ புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையர் 04295-267061. மக்களே, இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க.

News April 21, 2025

ஈரோடு: கடன் பிரச்சனையை தீர்க்கும் கால பைரவர்!

image

ஈரோடு ஆவல்பூந்துறை, ராட்டை சுற்றிபாளையத்தில், 39 அடி உயர பிரமாண்ட சிலையுடன் கூடிய, கால பைரவர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!