News April 14, 2024
ஈரோடு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அவ்வாறு வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் போன்ற 12 வகை ஆவணங்களை பயன்படுத்தலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
கோபி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

கோபி மதுவிலக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாரதி தலைமையிலான காவல்துறையினர் கவுந்தப்பாடி ஆலத்தூர் பாலக்காட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (50) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News November 21, 2025
ஈரோடு: வாலிபர் தூக்குமாட்டி தற்கொலை

ஈரோடு பெரியவலசு துரைசாமி வீதியை சேர்ந்தவர் கார்த்தி (30). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் கார்த்தி அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்தபோது கார்த்தி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
ஈரோடு மக்களே இலவச தையல் மெஷின் வேண்டுமா?

ஈரோடு மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


