News April 25, 2025
ஈரோடு அருகே விபத்து: பெண் பலி

அறச்சலூரைச் சேர்ந்தவர் கஸ்தூரி(55). இவர், சென்னிமலை அருகே தோட்ட வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை கோவில்பாளையத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டு திரும்ப அறச்சலூர் செல்வதற்காக பைக்கில், நாமக்கல் டூ தண்ணீர் பந்தல் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில் கஸ்தூரி சம்பவயிடத்திலே உயிரிழந்தார்.
Similar News
News December 4, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று (04/12/2025)சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 4, 2025
அறிவித்தார் ஈரோடு ஆட்சியர்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 19,97,189 வாக்காளா்களில் புதன்கிழமை வரை 19,28,231 (96.55 சதவீதம்) படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள 68,958 வாக்காளா்களிடம் கணக்கீட்டுப் படிவங்கள் பெறப்பட வேண்டியுள்ளன. மீதமுள்ள படிவங்களை திரும்பப் பெறுவது குறித்து பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தார்.
News December 4, 2025
ஈரோடு: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


