News April 3, 2025

ஈரோடு அருகே விபத்தில் இளைஞர் பலி!

image

ஈரோட்டை சேர்ந்தவர் கருப்புச்சாமி (28). இவர் நேற்றிரவு பைக்கில், பவானி வழியாக ஆப்பக்கூடல் சென்றுள்ளார். சேர்வராயன்பாளையம் வழியாக, நெடுஞ்சாலை ரவுண்டானாவை கடக்கும் போது, பைக், சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில் படுகாயமடைந்த, கருப்பசாமி, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

ஈரோடு: FREEயாக தங்கம், பணம் கொடுத்து திருமணம்!

image

ஈரோடு, வைரபாளையம், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் SHAREIT

News November 18, 2025

ஈரோடு: FREEயாக தங்கம், பணம் கொடுத்து திருமணம்!

image

ஈரோடு, வைரபாளையம், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் SHAREIT

News November 18, 2025

சத்தியமங்கலம்: விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை

image

சத்தியமங்கலம் செண்பகநாயக்கர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்தார். தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!