News March 21, 2024

ஈரோடு அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

Similar News

News November 26, 2025

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை!

image

ஈரோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பத்தை https://erode.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கலாம். விண்ணப்பத்தை நிரப்பி நேரிலோ (அ) தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுகொள்ளலாம். மேலும் நவ.22 முதல் டிச.06 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News November 26, 2025

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை!

image

ஈரோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பத்தை https://erode.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கலாம். விண்ணப்பத்தை நிரப்பி நேரிலோ (அ) தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுகொள்ளலாம். மேலும் நவ.22 முதல் டிச.06 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News November 26, 2025

ஈரோடு: சிறுமி பாலியல் வழக்கில் 40 ஆண்டுகள் சிறை

image

திருவண்ணாமலை மாவட்டம் கூத்தாண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வம் (எ) கரடி செல்வம் ஈரோடு மொடக்குறிச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததோடு கர்ப்பமாக்கினார். இந்த வழக்கில் ஈரோடு மகிலா நீதிமன்ற நீதிபதி சொர்ண குமார் தீர்ப்பு அளித்தார். அதில் குற்றவாளி கரடி செல்வத்திற்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!