News March 21, 2024
ஈரோடு அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
Similar News
News November 23, 2025
ஈரோடு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ஈரோடு மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியபடுத்துங்க.
News November 23, 2025
ஈரோடு: பைக், கார் இருக்கா? உங்களுக்கு தான்

ஈரோடு மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News November 23, 2025
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்படி, ஈரோடு- 2.2 மி.மீ, கொடுமுடி – 13.6 மி.மீ, பெருந்துறை – 3 மி.மீ, சென்னிமலை – 3 மி.மீ, பவானி – 2.2 மி.மீ, கவுந்தப்பாடி – 11 மி.மீ, அம்மாபேட்டை – 10.4 மி.மீ, வரட்டுப்பள்ளம் அணை-2 மி.மீ, கோபி-6.2 மி.மீ, எலந்தகுட்டைமேடு – 16.4 மி.மீ, கொடிவேரி அணை-2 மி.மீ, குண்டேரிப்பள்ளம் அணை – 1.2 மி.மீ, சத்தியமங்கலம்- 7 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


