News January 2, 2025

ஈரோடு: அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் 

image

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, மாநில அளவிலான கலைத்திருவிழா நாளை (ஜன.3) மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழா ஈரோடு மாவட்டத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் அறிவியல் வணிகவியல் கல்லூரி, கங்கா பள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.

Similar News

News October 14, 2025

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று அக்.,14ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளன. MJP மஹால் சடையம்பாளையம் ரோடு-ரங்கம்பாளையம் (ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3) , புவன பவனம் திருமண மண்டபம்-கோபி (கோபி நகராட்சி), சமுதாயக்கூடம் -ஊஞ்சலூர் (ஊஞ்சலூர் பேரூராட்சி), மயூரா மஹால்- பெருந்துறை (பெருந்துறை பேரூராட்சி), ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் – ஆனைக்கவுண்டனூர் (அம்மாபேட்டை வட்டாரம்).

News October 13, 2025

ஈரோடு பெண்கள் கபடி அணி சாதனை

image

பள்ளி மாணவிகளுக்கான பெண்கள் கபடி போட்டியானது, ஈரோடு திண்டுக்கல் சேலம் அணிகளுக்கு இடையே நேற்று அக்டோபர் 12 நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டம் கபடி அணி இரண்டாம் இடம் பிடித்து, பரிசு தொகையை வென்றது. மேலும் நேற்று காலை பரிசுத்தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணி, மற்றும் அணியின் பயிற்சியாளருக்கு முதலமைச்சர் தனது பாராட்டினை தெரிவித்தார்.

News October 13, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!