News March 29, 2024
ஈரோடு வருகை தரும் முதல்வர்

2024 மக்களவை தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மார்ச் 31ஆம் தேதி ஈரோடு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்; திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து சின்னியம்பாளையத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 16, 2025
ஈரோடு மாவட்டத்தில் வாரந்திர ஆய்வு கூட்டம்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (15.12.2025) மாவட்டத்தில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வாரந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் காவல் துறை, வருவாய் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
News December 15, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 15-12-2025 பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களுடைய நிறை, குறைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News December 15, 2025
ஈரோடு: பட்டா வழங்க கோரி மனு!

சிறுவலூர் அடுத்த ஊஞ்சபாளையம் பகுதியில் வசிக்கும் 32 ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு கர்ச்சிபாளையத்தில் 2011 நிபந்தனை பட்டா கொடுக்கப்பட்டது. யாரும் தற்போது வரை குடி ஏறாததால் அந்த பட்டாக்களை ரத்து செய்து மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் பெரியசாமியிடம் 32 குடும்பத்தினர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.


