News April 8, 2025
இ- பர்மிட் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் சேந்தமங்கலம்,மோகனூர், இராசிபுரம், திருச்செங்கோடு குமாரபாளையம் ஆகிய தாலுக்காக்களில் கிராவல், சாதாரண கற்கள், கிரானைட் குவார்ட்ஸ் உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கான நடைச்சீட்டு (E-Permit) மற்றும் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா அறிவுறித்தியுள்ளார்.
Similar News
News November 28, 2025
டிசம்பர் 2, 3-ந் தேதிகளில் ரேஷன்பொருட்கள் வினியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம், ரேஷன்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வருகிற டிச. 2-(ம)3-ந் தேதிகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம் கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர்-28ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. தொடர்ந்து 5வது நாளாக இந்த விலை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
News November 28, 2025
நாமக்கல்லில் நீரிழிவு நோய்க்கான மையம் துவக்கம்!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (நவ.28) டைப்-1 நீரிழிவு நோய் சிகிச்சை மற்றும் சிறப்பு பராமரிப்பு மையத்தினை ஆட்சியர் துர்காமூர்த்தி தொடங்கி வைத்தார். மேலும், மையத்தில் உள்ள டைப்-1 நீரிழிவு நோயால் ஏற்படும் தடுக்கக்கூடிய கண் பார்வை இழப்பை கண்டறிய AI தொழில்நுட்பம் கொண்ட கண் கேமரா, சிறுநீர செயல்பாடு, ஹீமோகுளோபின், தைராய்டு பரிசோதனை சாதனம் உள்ளிட்டவை பல வசதிகளை பார்வையிட்டார்.


