News April 24, 2025
இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா ?

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 19, 2025
நாகை: சிக்கல் சிங்காரவேலவருக்கு கந்த சஷ்டி திருவிழா

நாகை மாவட்ட பிரசித்தி பெற்ற சிக்கல் நவநீதேஸ்வரர் சுவாமி கோயிலில், சிங்காரவேலருக்கு கந்த சஷ்டி திருவிழாவை வருகிற அக்.21ஆம் தேதி முதல் அக்.31ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது. அதனையொட்டி முதல் நாளான அக்.21ம் தேதி கணபதி ஹோமம் – வாஸ்து சாந்தியும் நடைப்பெற உள்ளது என செயல் அலுவலர் ப.மணிகண்டன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதில், பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News October 19, 2025
நாகை: புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- எச்சரிக்கை

மன்னர் வளைகுடா, தெற்கு அந்தமான் மற்றும் அதனியொட்டி கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற அக்.21ம் தேதி தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, மேற்கு திசையில் வலுப்பெற கூட வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கடலுக்கு சென்றவர்கள் கரைத்திரும்ப வேண்டுமென மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
நாகையில் மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் 3,583 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகி துர்நாற்றம் விசுகிறது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். மேலும் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.