News April 24, 2025

இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா?

image

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 9, 2025

தா.பழூர்: மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

image

அரவிந்த் கண் மருத்துவமனை தா.பழூர் லயன்ஸ் சங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் (ஆக.,10) காலை 8 மணி முதல் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. முகாமில் பார்வைத் திறன் குன்றியோர் தங்களது ஆதார் கார்டு நகலை எடுத்து வந்து பதிவு செய்து பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

அரியலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், எம்.எல்.ஏ கு.சின்னப்பா, அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News August 9, 2025

அரியலூர்: ரூ.1,42,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!