News March 24, 2025
இஸ்லாமியர்களை சித்தப்பா என அழைப்பேன் – ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு நோன்பு கஞ்சி அருந்தினார். பின்னர் பேசிய அவர் இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இஸ்லாமியர்களை நான் சித்தப்பா என அழைப்பேன், அவர்கள் என்னை மகன் என அழைப்பார்கள் என பேசினார்.
Similar News
News January 6, 2026
விருதுநகரில் மீண்டும் ஒரு கொலை – அதிர்ச்சி

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன்(30) நெடுங்குளத்தில் தனது உறவினர் செல்வராணி வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்கு செய்துவந்தார். இந்நிலையில் இன்று காலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். ஆவியூரில் இன்று காலை ராமசாமி (32) படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 2 கொலைகள் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 6, 2026
விருதுநகர் அருகே இளைஞர் படுகொலை

காரியாபட்டி தாலுகா ஆவியூர் கிராமத்தில் இன்று காலை ஆவியூர் பஸ் ஸ்டாப் அருகில் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த இராசுதேவர் என்பவர் மகன் இராமசாமி (32) கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
விருதுநகர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

விருதுநகர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!


