News March 24, 2025
இஸ்லாமியர்களை சித்தப்பா என அழைப்பேன் – ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு நோன்பு கஞ்சி அருந்தினார். பின்னர் பேசிய அவர் இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இஸ்லாமியர்களை நான் சித்தப்பா என அழைப்பேன், அவர்கள் என்னை மகன் என அழைப்பார்கள் என பேசினார்.
Similar News
News November 16, 2025
விருதுநகர்: போக்சோவில் 11-ம் வகுப்பு மாணவன் கைது

நரிக்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார், சிறுவனை மதுரை சிறார் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 16, 2025
விருதுநகர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News November 16, 2025
விருதுநகர் காருக்குள் இறந்த நிலையில் சிறுவன்

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் திருவிழாவிற்கு பாட்டி வீட்டிற்கு கடந்த நவ.13ம் தேதி திருமங்கலம் நடுகோட்டை ராஜசேகர், மகன் சண்முகவேல் 7, வந்திருந்தனர். விளையாடிக் கொண்டிருந்த சண்முகவேல் மாலை 4:00 மணியிலிருந்து காணவில்லை.இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து காரை திறந்த போது காருக்குள் சண்முகவேல் இறந்த நிலையில் இருந்தார். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


