News March 24, 2025
இஸ்லாமியர்களை சித்தப்பா என அழைப்பேன் – ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு நோன்பு கஞ்சி அருந்தினார். பின்னர் பேசிய அவர் இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இஸ்லாமியர்களை நான் சித்தப்பா என அழைப்பேன், அவர்கள் என்னை மகன் என அழைப்பார்கள் என பேசினார்.
Similar News
News December 22, 2025
விருதுநகர்: கூலி தொழிலாளி மர்மமான முறையில் மரணம்

ராமநாதபுரம் கமுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(33). இவர், திருத்தங்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த காளீஸ்வரன் மதுபோதைக்கு அடிமையாகிய நிலையில் நேற்று அதிவீரன்பட்டி கல் கிடங்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
News December 22, 2025
சிவகாசி: பள்ளி மைதானத்திலே கஞ்சா விற்பனை!

சிவகாசி அருகே திருத்தங்கல் தனியார் பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உடனே அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்ற கண்ணகி காலனியை சேர்ந்த பால்ராஜ்(20), தினேஷ்குமார் 26, வினோத்ராஜா 21, ஆகியோரை கைது செய்தனர். மேலும், அங்கிருந்து தப்பி ஓடிய சிவகாசி அய்யப்பன் காலனியை சேர்ந்த விக்னேஷ்வரன் (எ)விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.
News December 22, 2025
விருதுநகர்: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

விருதுநகர் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு <


