News March 24, 2025
இஸ்லாமியர்களை சித்தப்பா என அழைப்பேன் – ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு நோன்பு கஞ்சி அருந்தினார். பின்னர் பேசிய அவர் இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இஸ்லாமியர்களை நான் சித்தப்பா என அழைப்பேன், அவர்கள் என்னை மகன் என அழைப்பார்கள் என பேசினார்.
Similar News
News January 9, 2026
விருதுநகர்: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

விருதுநகர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க.
News January 9, 2026
விருதுநகர்: 15 ஆண்டுகளுக்குப்பின் ஓருவர் கைது

விருதுநகர் இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன் 40. இவரை 2010 ல் வீடு புகுந்து மூன்றரை பவுன் நகை திருடிய வழக்கில் டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த இவர் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை.இந்நிலையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.
News January 9, 2026
சிவகாசி: தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் பாலகங்காதரன் திமுகவில் இணைந்தனர். 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலகங்காதரன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானது குறிப்பிடத்தக்கது.


