News March 24, 2025
இஸ்லாமியர்களை சித்தப்பா என அழைப்பேன் – ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு நோன்பு கஞ்சி அருந்தினார். பின்னர் பேசிய அவர் இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இஸ்லாமியர்களை நான் சித்தப்பா என அழைப்பேன், அவர்கள் என்னை மகன் என அழைப்பார்கள் என பேசினார்.
Similar News
News November 14, 2025
சிவகாசியில் இலவச கண் பரிசோதனை முகாம்

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, தனியார் மருத்துவமனைகள் இணைந்து சிவகாசி அருகே விஸ்வநத்தம் மதி சுகாதார மைய வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர். இந்த முகாமினை பாமக மாநில பொருளாளர் திலகபாமா துவக்கி வைத்தார். முகாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். SHARE
News November 14, 2025
விருதுநகர் MedPlus மருந்தகத்தில் வேலை

விருதுநகரில் உள்ள MedPlus மருந்தகத்தில் Pharmacy assistant பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 18 முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள் ஆண்கள் தேவை.
மாத ஊதியமாக ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை வழஙக்கப்படும். முன்அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். 10th, 12th, எதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த மாதம் 25ம் தேதிக்குள் <
News November 14, 2025
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்

சிவகாசியில் வரும் 2026 தீபாவளி பண்டிகைக்காண பட்டாசு உற்பத்தி பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே துவங்கியது. ஆனால் துவக்கத்திலிருந்தே அவ்வப்போது பெய்து மழை மற்றும் கடும் குளிர் நிலவுகிறது. எனவே பட்டாசு தயாரிக்க போதிய வெப்பநிலையின்றி பட்டாசு உற்பத்தி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டாசு தட்டுப்பாட்டை போக்க முன்கூட்டியே உற்பத்தியை துவங்கிய உற்பத்தியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


