News March 26, 2024
இவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் – வனத்துறை எச்சரிக்கை

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறிய மூவர் கடந்த இரு தினங்களில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இதயக்கோளாறு , ஆஸ்துமா, ரத்த கொதிப்பு இருப்பவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 19, 2025
வெள்ளியங்கிரி மலையில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த புவனேஷ்வரன் (18) என்ற இளைஞர், கோவை, வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்றிரவு கீழே இறங்கியுள்ளார். அப்போது கால் தவறி கீழே சரிந்த அவர், 10 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்துள்ளார். உடனடியாக டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News April 19, 2025
கோவை: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️கோவை மாவட்ட வருவாய் அலுவலர் 0422- 2300035. ▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் 0422 -2301523. ▶️சிறப்பு துணை ஆட்சியர் 0422- 2304204. ▶️மாவட்ட பின்தங்கிய வகுப்பு நல அலுவலர் 0422-2300404. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0422- 2301114. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0422- 2300569. ▶️மாவட்ட தேர்தல் அலுவலர் 0422- 2303786. ▶️உதவி இயக்குநர், நில அளவை 0422- 2300293. இதை SHARE பண்ணுங்க.
News April 19, 2025
மருதமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!

கோவை, மருதமலை தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், கோவிலில் போதிய வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாத காரணத்தினாலும் செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில், மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றனர்.