News January 23, 2025
இளைஞர் மர்ம மரணம், விசாரணை தொடங்கியது

மதுரை : வேப்பங்குளத்தைச் சேர்ந்த மக்கள் விடுதலைக் கட்சி நிர்வாகி காளையன் மர்மமாக உயிரிழந்ததை அடுத்து விசாரணை கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, காளையன் மர்ம மரணம் தொடர்பாக, பட்டியலினத்தவர்க்கான தேசிய ஆணைய இயக்குனர் ரவிவர்மா புதன்கிழமை மதுரை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கள்ளிக்குடி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டார்.
Similar News
News November 22, 2025
மதுரை: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 22, 2025
மதுரை: சிறுமி தற்கொலை முயற்சி… இளைஞருக்கு வலை

அலங்காநல்லுார் அருகே அ.புதுப்பட்டி பச்சையப்பன் மகன் சங்கிலிக்கருப்பு 24. இவர் அப்பகுதி ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை தந்து வந்துள்ளார். ஏற்க மறுத்த சிறுமியின் வீட்டு கதவு மீது கற்களை எறிந்து மிரட்டினார். இதனால் பயந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றார். சிறுமியை காப்பாற்றிய பெற்றோர் சமயநல்லுார் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்ததை தொடர்ந்து வாலிபர் தலைமறைவானார். போலீசார் தேடுகின்றனர்.
News November 22, 2025
மதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாய்ந்த போக்சோ!

மதுரை மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியில் வேல்முருகன் என்பவர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். வேல்முருகனின் மகன் கண்ணன் 25 சிறுமியிடம் அத்துமீறி நடந்ததுடன், அடிக்கடி பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரில் கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.


