News April 9, 2025
இளைஞர் மரணம் – மறுபிரேத பரிசோதனை செய்ய ஆணை

தர்மபுரி மாவட்டம் ஏமானுர் வனப்பகுதியில் யானை வேட்டையாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் அடைந்த விவகாரத்தில் சடலத்தை மறுபிரேத பரிசோதனை செய்ய நேற்று நீதிமன்றம் உத்தரவு. மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 3 பேர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் -என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
Similar News
News November 25, 2025
தருமபுரி: மின்சாரம் தாக்கி பெண் பலி!

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியில், ஆட்டுக் கொட்டகைக்குச் சென்ற ஜெயக்கொடி (41) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கி கிடந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் மாரியப்பனுக்கும் லேசான மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News November 25, 2025
தருமபுரி: மின்சாரம் தாக்கி பெண் பலி!

கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியில், ஆட்டுக் கொட்டகைக்குச் சென்ற ஜெயக்கொடி (41) என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கி கிடந்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் மாரியப்பனுக்கும் லேசான மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News November 25, 2025
தருமபுரி: சட்டவிரோத டீசல் விற்பனை: ஒருவர் கைது

காரிமங்கலம் பகுதிகளில் சட்டவிரோத டீசல் விற்பனை நடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னேரி பகுதியில் சென்றபோது அங்கே சட்டவிரோதமாக டீசலை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த செல்வராஜ் 40 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 25 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.


