News August 14, 2024
இளைஞர் உயிரிழப்பு: ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு

மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாலம் கட்டுமான பணியில் விழுந்து கம்பி சொருகி இளைஞர் மணிகண்டன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் தந்தை இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து நபர்கள் மீது இன்று பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே உதவி திட்ட மேலாளர் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News September 17, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில், வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
News September 17, 2025
சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டம் சோதியக்குடி கிராமத்தில் சாலை சேதம் அடைந்துள்ள நிலையில், புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
News September 17, 2025
காதலியின் தாயார் வன்கொடுமை சட்டத்தில் கைது

அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்ற இளைஞர் கடந்த 15ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் புதிய திருப்பமாக வைரமுத்துவின் காதலி மாலினி என்பவரின் தாயார் விஜயா கைது செய்யப்பட்டுள்ளார். மாலின் சகோதரர் குகன் , அன்புநிதி பாஸ்கர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை விடுத்துள்ளனர்.