News August 14, 2024
இளைஞர் உயிரிழப்பு: ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு

மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாலம் கட்டுமான பணியில் விழுந்து கம்பி சொருகி இளைஞர் மணிகண்டன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டன் தந்தை இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து நபர்கள் மீது இன்று பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே உதவி திட்ட மேலாளர் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News December 6, 2025
மயிலாடுதுறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

தமிழக முதல்வர் சென்னையில் இன்று தாயுமானவர் திட்டம் கல்வி சுய தொழில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை இன்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் கல்வி சுயதொழில் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
News December 6, 2025
மயிலாடுதுறை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 6, 2025
மயிலாடுதுறை: போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!


